ஐந்து சொற்களில் மட்டும் பேச வேண்டும் ஜூன் 12, 2007
Posted by pctimes in இணையம், செய்தி.2 comments
அண்மையில் Webby Awards 2007 நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. ஜுன் 5 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு தொடர்பாக இம்மாத தமி்ழ் PC TIMES இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். நிகழ்வின் சுவாரஸ்யங்கள் பற்றியும் இதோ எமது வலைப்பதிவின் ஊடாக பகிர்ந்து கொள்கிறோம்.
விருது வழங்கல் விழாவில் விருது பெற்றவர்கள் தாங்கள் விருது பெற்றுக் கொண்டதை தெரிவிக்கும் ஏற்றுக் கொண்ட பேச்சு ஐந்து சொற்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென Webby விருப்பம் தெரிவித்திருந்தது.
இதன்படி, வெற்றியாளர்கள் தங்கள் உரையை ஐந்து சொற்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தனர். மிகவும் சுவாரசியமான சொற்களைக் கொண்ட பேச்சுகள் மேடையில் அரங்கேறின.
வெற்றி பெற்ற Ebay ஆனது, தனது பேச்சில் “ஏல விற்பனை 99 சதத்தில் ஆரம்பமாகும்” (“Bidding starts at 99 cents.”) என குறிப்பிட்டது.
அதேபோல், உலகளவில் பிரசித்தம் வாய்ந்த வீடியோ கோப்பு பகிர்வுத்தளத்தின் சார்பில் விருதைப் பெற்றுக் கொண்ட You Tube இன் ஸ்தாபகர்கள், “You Tube, இரசிகர்களே இது உங்களுக்கானது” (“You Tubers, this is for you.”) என தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.
உலகளவில் 60 மேற்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 8000 இற்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்தே விருது வழங்கலுக்கு பொருத்தமான வெற்றியாளர்களன் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ உங்கள் பார்வைக்காக, Webby Awards 2007 நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழற்படங்களை எமது வலைப்பதிவூடாக பகிர்ந்து கொள்கிறோம்.
இரண்டு பில்லியனைத் தாண்டும் ஜூன் 12, 2007
Posted by pctimes in செய்தி, வன்பொருள்.add a comment
2008 ஆம் ஆண்டளவில் உலகளவில் பாவிக்கப்படும் தனிப்பட்ட கணினிகளின் எண்ணிக்கையானது, ஒரு பில்லியனாக அதிகரிக்குமெனவும், இது 2015 ஆம் ஆண்டில் மிக வேகமாக 2 பில்லியனை அடைந்து விடுமெனவும் வர்த்தக ஆய்வறிக்கையொன்று எதிர்வு கூறுகின்றது.
Forrester Research எனும் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலிருந்து, 2003 தொடக்கம் 2015 வரை உலகளவில் பாவனைக்கு விடப்படும் கணினிகளின் எண்ணிக்கை 12 சதவீதத்தினால் சராசரியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பில்லியன் கணினிகள் என்ற இலக்கை அடைய 27 ஆண்டுகள் சென்றாலும், அடுத்த பில்லியனை அடைய வெறும் ஐந்து ஆண்டுகளே எடுக்குமென இவ்வறிக்கை சுட்டி நிற்கின்றது. உலகளவில் புதுப்பிக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், குறைந்த விலையில் கணினிகள் விற்பனையாதல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வுள்ள மக்களால் ஏற்படுத்தப்படும் கேள்வி என்பனவற்றால், இந்நிலை சாத்தியமாகுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 2015 ஆம் ஆண்டில் மொத்தக் கணினித் தொகையில் 775 மில்லியன்கள் காணப்படுமெனவும் அவ்வாய்வறிக்கை சுட்டி நிற்கிறது.
கணினிகளிற்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.
நிழற்பட உணரிகள் பெரியளவில் உற்பத்தி ஜூன் 6, 2007
Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.1 comment so far
டிஜிடல் கெமரா மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவைகளில் பொருத்தப்படும் நிழற்பட உணரிகளை (image sensors) உற்பத்தி செய்வதற்காக 500 அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக Sony நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இந்த முதலீடானது, இவ்வருடம் முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் வரை உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது என Sony நிறுவனம் தெரிவிக்கிறது.
Sony நிறுவனமே நிழற்பட உணரிகளின் உற்பத்தியில் ஜாம்பவானத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
iPhone வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது ஜூன் 4, 2007
Posted by pctimes in சாதனம், செய்தி, வன்பொருள்.add a comment
Apple நிறுவனத்தின் மிகப் புரட்சிகரமான உற்பத்தியாகிய iPhone ஐப் பற்றி நீங்கள் அறிவீர்கள் (தமிழ் PC TIMES, 2007 பெப்ரவரி மாத இதழ்). இந்த iPhone ஆனது இம்மாதம் வெளியிடப்படடுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது என்ன திகதி என அறிவிக்கப்படவில்லை.
பலரும் எதிர்பார்க்கும் இந்த iPhone அமெரிக்காவில் வெளியாகும் தினத்தை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மாதம் 29 ஆம் திகதி இந்தப் புரட்சிகர iPhone வெளியாகுமென நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளியாகவுள்ள iPhone ஆனது, 499 மற்றும் 599 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியில் அனைவரையும் கவர்ந்த பண்பாக “தொடுகை உணர்ச்சி” இடைமுகம் (touch-sensitive interface) காணப்படுகிறது.
இந்தச் சாதனத்தின் மூலம் இணைய இணைப்பின் விளைவை துரிதமாக பெற்றுக் கொள்ள முடியும் என சொல்லப்படுகின்றது.
ஐரோப்பியாவிலும், உலகம் பூராகவும் இந்த iPhone வெளியாகும் தினம் இதுவரையில் அறிவிக்கப்படவி்ல்லை.
இணைய அடிப்படையான தாக்குதல்கள் பற்றிய அவதானம் தேவை ஜூன் 4, 2007
Posted by pctimes in இணையம், செய்தி.add a comment
எதிர்காலத்தில் இணைய அடிப்படையான தாக்குதல் மிகப் பெரிய தலையிடியாகக் உலகுக்கு மாறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கக இராஜங்க உப செயலாளர் John Negroponte அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற இணைய அடிப்படையான தாக்குதலைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார். அணமையில் A distributed denial-of-service, or DDoS என்ற இணையத் தாக்குதலே குறித்த நாட்டில் இடம்பெற்றது. இந்த இணைய அடிப்படையான தாக்குதல் தொடர்பான விடயங்களைப் பற்றி நாம் எமது மார்ச் மாத இதழில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.
“எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கப் போகும் இணைய அடிப்படையான தாக்குதல்களை எதிர்கொள்ள எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என Negroponte மேலும் தெரிவிக்கிறார்.
நாடுகளிடையான நல்லுறவைக் கூடப் பாதிக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற தாக்குதலும் ரஷ்யா நாட்டின் இணையத்தளங்களை தடுத்து நிறுத்த வழிசெய்தது நீங்கள் அறிந்ததே!