jump to navigation

இணைய அடிப்படையான தாக்குதல்கள் பற்றிய அவதானம் தேவை ஜூன் 4, 2007

Posted by pctimes in இணையம், செய்தி.
trackback

எதிர்காலத்தில் இணைய அடிப்படையான தாக்குதல் மிகப் பெரிய தலையிடியாகக் உலகுக்கு மாறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கக இராஜங்க உப செயலாளர் John Negroponte அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற இணைய அடிப்படையான தாக்குதலைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார். அணமையில் A distributed denial-of-service, or DDoS என்ற இணையத் தாக்குதலே குறித்த நாட்டில் இடம்பெற்றது. இந்த இணைய அடிப்படையான தாக்குதல் தொடர்பான விடயங்களைப் பற்றி நாம் எமது மார்ச் மாத இதழில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

“எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கப் போகும் இணைய அடிப்படையான தாக்குதல்களை எதிர்கொள்ள எம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என Negroponte மேலும் தெரிவிக்கிறார்.

நாடுகளிடையான நல்லுறவைக் கூடப் பாதிக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

எஸ்டோனியா நாட்டில் இடம்பெற்ற தாக்குதலும் ரஷ்யா நாட்டின் இணையத்தளங்களை தடுத்து நிறுத்த வழிசெய்தது நீங்கள் அறிந்ததே!


மறுமொழிகள்»

No comments yet — be the first.